தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் பெண் பலியான சம்பவம்; காதலியின் வீட்டில் பதுங்கிய சிவசேனா தலைவரின் மகன் கைது: 3 நாட்களுக்கு பின் சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்

மும்பை: விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவரின் மகன், காதலியின் வீட்டில் இருந்து ரிசார்ட்டில் பதுங்கிய போது கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா (ஏக்நாத்) மூத்த தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா, மும்பையின் வோர்லி பகுதியில் தனது பிஎம்டபிள்யூ காரில் அதிவேகத்தில் சென்ற போது, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் டிரைவர் ராஜ்ரிஷி பிடாவத், மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement

முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷாவை போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 7ம் தேதி சம்பவம் நடந்த பின் தலைமறைவான மிஹிர் ஷா, தனது காதலியின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அவர்களுக்கு இடையே 40 முறை செல்போனில் பேசியுள்ளனர். காதலியின் வீட்டில் இரண்டு மணி நேரம் தூங்கிய மிஹிர் ஷா, கார் விபத்து மற்றும் பெண் ஒருவர் பலியானது குறித்து காதலியிடம் கூறியுள்ளார். அவர் மிஹிர் ஷாவின் மூத்த சகோதரி பூஜாவை தொடர்பு கொண்டார். அதன் தொடர்ச்சியாக கோரேகானில் உள்ள பூஜாவின் வீட்டில் மிஹிர் ஷா தங்கவைக்கப்பட்டார். அதன்பின் மிஹிர் ஷாவை அழைத்துக் கொண்டு யூர் ஹில்ஸ் ரிசார்ட்டுக்கு புறப்பட்டனர். சில மணி நேரம் கழித்து, மற்றொரு ரிசார்ட்டுக்கு சென்றனர். அங்கேயே அவர்கள் தங்கியிருந்தனர். இவ்விசயத்தில் அவர்களை தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.

பின்னர் விரார் பாடாவில் உள்ள அந்த ரிசார்ட்டை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். ரிசார்ட்டில் பதுங்கியிருந்த மிஹிர் ஷா, அவரது தாய் மீனா, சகோதரிகள் பூஜா, கிஞ்சல், நண்பர் அவ்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்’ என்று கூறினார்.

Advertisement

Related News