தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியில் பரிதாப சம்பவம்; யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை; போலி டாக்டரால் பெண் உயிரிழப்பு

பாரபங்கி: உபியில் யூடியூப்பை பார்த்து போலி டாக்டர் தவறான அறுவை சிகிச்சை செய்ததால் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உபி மாநிலம்,பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் தேஹ்பகதூர் ராவத். இவருடைய மனைவி முனிஷ்ரா ராவத்துக்கு வயிற்றில் கடும் வலி இருந்துள்ளது. இதையடுத்து, கோத்தியில் உள்ள கிளினிக்குக்கு சென்றார். கிளினிக்கை நடத்தி வந்த கியான் பிரகாஷ் மிஸ்ரா முனிஷ்ராவை சோதித்து விட்டு சிறுநீரக கல்லினால் இந்த வலி ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என கூறியுள்ளார்.

Advertisement

அறுவை சிகிச்சைக்கு மொத்தம் ரூ. 25,000 செலவாகும் என்று மிஸ்ரா கூறியுள்ளார். இதனை நம்பிய தேஹ்பகதூர் கடந்த 5ம் தேதி அறுவை சிகிச்சைக்காக முன் பணமாக ரூ.20,000 கொடுத்துள்ளார். இதையடுத்து இளம் பெண்ணுக்கு கியான் பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கு அடுத்த நாள் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேஹ்பகதூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், போலி டாக்டரான கியான் பிரகாஷ் சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடும் போதையில் இருந்த அவர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சையின் போது பல நரம்புகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் முனிஷ்ரா உடல் நிலை மோசமடைந்து கடந்த 6ம் தேதி உயிரிழந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கியான் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் விஜய் குமார் மிஸ்ரா, அவரது நெருங்கிய உறவினர் விவேக் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் அதிகாரி கூறுகையில் இளம் பெண் மரணம் சம்மந்தமாக போலி டாக்டர் கியான் பிரகாஷ்,விவேக் குமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement