தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பஸ் ஜன்னல் வழியாக குதித்து பெண் தற்கொலை

திண்டிவனம்: ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் பஸ் ஜன்னல் வழியாக குதித்த பெண் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகள் அருணா(32), இவர் பி.சி.ஏ பட்டதாரி. ஷேர் மார்க்கெட்டில் அதிக ஈடுபாடு இருந்ததால் அதில் அதிக பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதமாக மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் அருணாவும் அவரது அம்மாவும் நேற்று முன்தினம் இரவு திருநாகேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மூத்த மகளான ரமா(35) வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் வந்தனர். அப்போது திண்டிவனம் அருகே கூச்சிகொளத்தூர் பகுதியில் பேருந்து சென்றபோது ஓட்டுநரின் பின்புற இருக்கைக்கு அருகே இருந்த ஜன்னல் வழியே அருணா கீழே குதித்துள்ளார்.

இதில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News