தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் நிலையில் கணவருடன் இருந்த இளம்பெண் மீது தாக்குதல்: போலீஸ், மீடியாக்களுடன் சென்று மடக்கிய மனைவி

திருமலை: கருத்து வேறுபாடால் பிரிந்திருக்கும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை அறிந்த அவரது மனைவி, அங்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நட்சத்திரா (29).
Advertisement

இவர் கடந்த 2012ம் ஆண்டு மிஸ் விசாகப்பட்டினமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த திரிபுரானே சாய்வெங்கடதேஜா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.இதற்கிடையில் தனது கணவர், வேறொரு பெண்ணுடன் வசிப்பதை அறிந்த நட்சத்திரா அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார். அதன்படி நட்சத்திரா நேற்று போலீசார் மற்றும் ஊடகத்தினரை அழைத்துக்கொண்டு சாய்வெங்கடதேஜா தங்கியிருக்கும் வீட்டிற்கு அதிரடியாக சென்றார்.

அங்கு தேஜாவும், வேறு ஒரு இளம்பெண்ணும் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாக பிடித்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நட்சத்திரா, தேஜாவுடன் இருந்த பெண்ணை சரமாரி தாக்கினார். இதை பார்த்த தேஜா, நட்சத்திராவை தாக்கி வீட்டில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து போலீசார், நட்சத்திரா, சாய்வெங்கடதேஜா, மற்றும் அவருடன் இருந்த பெண் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். அப்போது சாய்வெங்கடதேஜா கூறுகையில், இந்த பெண் சினிமாவில் நடிப்பது தொடர்பாக வந்தார்.

எங்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நட்சத்திரா என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது எனகூறினார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement

Related News