தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் துணை ஜனாதிபதி சந்திப்பு: காங். தலைவர் கார்கே கலந்து கொள்வாரா?

புதுடெல்லி: அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் அவைத் தலைவர்கள் கூட்டத்திற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டின் 15வது துணைக் குடியரசுத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் 12ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின்னர் சில தலைவர்களை அவர் முறைசாரா வகையில் சந்தித்துப் பேசியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அவர் அவைத் தலைவர்களுடன் நடத்தும் முதல் முறையான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வரும் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 7) நடைபெற உள்ளது. துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவை முன்னவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட சுமார் 30 கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இருப்பினும், இதய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், வேறு அலுவல் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் அவைத் தலைவர்கள் கூட்டத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Related News