தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காற்றாலை மின் உற்பத்தி உயர்வு

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காற்றாலைகளுக்கு சாதமாக வீசுவதால் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி உயர்ந்து வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காற்றாலை சீசன் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை இருக்கும். கடந்த மே மாதம் 1,105 மில்லியன் யூனிட், ஜூன் 19ம் தேதி வரை 1,100 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது. கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 2,400 மில்லியன் யூனிட்கள் கிடைத்தன.
Advertisement

தற்போதைய வானிலை முன்னறிவிப்பின்படி, வரும் மாதங்களில் இதை விட அதிக காற்றாலை மின்சாரம் கிடைக்கலாம். நேற்று முன்தினம் 62 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்தது. தென்மேற்கு காற்று வீசுவதால், சிறிய காற்றாலை மின் நிலையங்கள் கூட உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன. ​​மாநிலத்தின் மொத்த காற்றாலை மின் நிறுவல் திறன் 10,600 மெகாவாட்டாக உள்ளது. பெரும்பாலான காற்றாலைகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளன. தமிழகத்தில் இந்த காற்றாலை சீசனில் காற்று வீசும் அளவு உச்சத்தை எட்டியுள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்து வருகிறது.

மேலும் 2023-24 நிதியாண்டில், மின்வாரியத்திற்கு 12,933 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்தது. அதே நேரத்தில், 586 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையங்களும் கட்டப்பட்டன. எனவே, இந்த ஆண்டு கூடுதலாக 1,000 முதல் 1,500 மில்லியன் யூனிட் எதிர்பார்க்கலாம். கடந்த வாரம், கனமழை காரணமாக, காற்றின் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது. இருப்பினும், தற்போது காற்றாலை உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தென் மண்டல மின் ஆணையத்தின் கணிப்புப்படி வரும் நாட்களில் காற்றின் அளவு மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News