தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூலூர் அருகே காற்றாலை இயந்திரம் தீயில் எரிந்து சேதம்

சூலூர்: சூலூர் அருகே இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாக காற்றாலை இயந்திரம் தீயில் எரிந்து சேதமானது. கோவை மாவட்டம் சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இந்தியாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் காற்றாலை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து அரசுக்கு வழங்கி வருகிறது. கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காற்றாலை மின்சார தயாரிக்கும் இயந்திரம் இயங்கி வருகிறது.

Advertisement

இந்த பகுதியில் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளதால் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் காற்றாடிகள் இயங்கி வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாத காற்றாடிகள் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாக செலக்கரச்சல் பகுதியில் காற்றாலை இயந்திரத்தில் இருந்து லேசாக புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் காற்றாலை இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News