தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடமதுரை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது: நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

வடமதுரை: வடமதுரை அருகே, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, அலுமினிய தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே, வேலாயுதம்பாளையம், ஆலம்பட்டி வனப்பகுதிகளில் மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வனத்துறைக்கு புகார் வந்தது.

Advertisement

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், வனச்சரகர்கள் மதிவாணன், முருகேசன் வனவர்கள் முரளி, கார்த்திக், சாமியப்பன், மற்றும் வனத்துறையினர் அடங்கிய தீபாவளி சிறப்பு வேட்டை தடுப்புக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, ஆலம்பட்டி வள்ளிக்கரடு வனப்பகுதியில் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது.

அவரைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவர் ஆலம்பட்டி அருகே உள்ள எல்லைக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (43) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த வனத்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, அலுமினியக் குண்டுகள், டார்ச் லைட், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News