தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உத்தராகண்டில் அடுத்தடுத்து 3 இடங்களில் காட்டாற்று வெள்ளம்: மூழ்கிய கிராமம்; மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்

 

 

டேராடூன்: உத்தரகாண்ட்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள தாரல்லி, சுஹி டாப், ஹர்சில் ஆகிய 3 இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தாரல்லியில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. உத்தரகாசியின் தராலியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்டோரும், கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 150 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாரல்லியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே உத்தராகண்ட் காட்டாற்று வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தனர். உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமியிடம் தொலைபேசி மூலம் நிலைமையை கேட்டறிந்தனர்.

Related News