தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூணாறு தேயிலை எஸ்டேட்களில் உலா வரும் காட்டு யானைகள்: தொழிலாளர்கள் பீதி

 

Advertisement

மூணாறு: மூணாறு தேயிலை எஸ்டேட்களில் காட்டு யானைகள் உலா வருவதால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இவைகளில் அவ்வப்போது காட்டு யானைகள் முகாமிடுகின்றன. இதனால், வேலைக்கு வரும் தொழிலாளர்கள் அச்சமடைகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தேவிகுளம் எஸ்ட்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களை அச்சுறுத்தி விரட்டி வருகின்றன.

மேலும், தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் யானைகள் புகுந்து குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துகின்றன. சைலன்ட்வேலி எஸ்டேட் பகுதியில் நடமாடும் படையப்பா என்ற ஒற்றை யானை, அப்பகுதியில் உள்ள வாழை, பீன்ஸ், காரட் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகின்றன. எனவே, எஸ்டேட் பகுதியில் முகாமிடும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முகாமிடும் யானைகள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களை தள்ளிவிட்டு உடைக்கின்றன. சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் வந்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுக்கின்றனர். எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதற்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News