தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம்

Advertisement

கோவை, ஜூலை 10: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் அடிக்கடி, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனிடையே, கடந்த சில நாட்களாக கெம்பனூர், ஓணாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை, குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த ஆண் காட்டு யானை, ஓணாப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த அந்த யானை, உணவு தேடி சுற்றியது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தோட்டத்து வீடுகளில் ஆட்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி நுழைந்து விளைபொருட்களையும், ரேசன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News