தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பர்கூர் மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி

அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் தனியார் மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை பலியானது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் கிழக்கு மலையிலுள்ள ஈரட்டி வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ள கடந்த 1 மாத்துக்கும் மேலாக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஈரெட்டி குடியிருப்பு பகுதியிலும், அங்குள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும், தென்னை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததுடன் பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, பர்கூர் வனத்துறையினருக்கு அப்பகுதி மலைவாழ் மக்கள் தகவல் கொடுத்தனர். ஒரு சில நாட்கள் கடமைக்கு யானையை வனத்துறையினர் விரட்டினர். முழுமையாக யானை வெளியேறுவதையும், சேதப்படுத்துவதையும் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இதனால் அச்சத்தில் இருந்த பொதுமக்கள் யானையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாயி வைரனின் தனியார் தோட்டத்து மின்வேலியில் சிக்கி ஒற்றை ஆண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது. இது குறித்து மலைவாழ் மக்கள் பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடக்கும் ஆண் யானை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News