தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூண்டி கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

கோவை: கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை மீதுள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்வது வழக்கம். இதனிடையே அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி அடிக்கடி கோயில் பகுதிக்கு வருவது வழக்கம்.இந்த நிலையில் விஜயதசமி பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பூண்டி கோயில் பகுதிக்கு வந்தது.

Advertisement

பின்னர் கோயிலுக்குள் காட்டு யானை நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானையை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்போ, பொருட்கள் சேதமோ ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து அந்த யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ரோந்து குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ‘‘ஓடுங்க, ஓடுங்க. திரும்பி பார்க்காதீங்க. ஓடுங்க...’’ என யானை வருவதைப் பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement