தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சத்தி அருகே இன்று அதிகாலை வேனை வழிமறித்த காட்டு யானை

 

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை வேனை வழிமறித்த காட்டு யானை அதிலிருந்த தக்காளிப்பழங்களை எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் இருந்து அறுவடை செய்த தக்காளி பழங்களை ஏற்றிக் கொண்டு வேன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் கேர்மாளம்-ஆசனூர் வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தது. கானக்கரை கிராமம் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை சாலையின் நடுவே நின்றபடி வேனை வழிமறித்தது.

இதனால் டிரைவர் அச்சமடைந்து வேனை நிறுத்தினார். அப்போது அருகில் வந்த யானை வேனில் பாரம் ஏற்றப்பட்டு இருந்த தக்காளிப்பெட்டிகளை தனது தும்பிக்கையால் எடுக்க முயன்றது. டிரைவர் சிறிது நேரம் போராடி வேனை மெதுவாக நகர்த்தி யானையிடம் இருந்து தப்பினார். சமீபகாலமாக கரும்பு பாரம் ஏற்றிய லாரிகளையும், காய்கறி பாரம் ஏற்றிய வேன்களையும் காட்டு யானைகள் வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News