தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டியுடன் சாலையில் திரிந்த காட்டு யானை

*சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு

Advertisement

கூடலூர் : கூடலூரை அடுத்த மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் குட்டியுடன் சாலையில் நடமாடிய காட்டு யானை சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிவட்ட வனப்பகுதிகள் மழை காரணமாக பசுமை அடைந்து காணப்படுகிறது.

எனினும் அடர் வனப்பகுதிகளில் லண்டனா மற்றும் பார்த்தீனியம் உள்ளிட்ட பல்வேறு களைத்தாவரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால், புல்வெளிகள் குறைந்துள்ளன. இதனால் யானைகள், மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட தாவர உண்ணிகள் சாலைஓர புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.

வனப்பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் வனப்பகுதிகளுக்கு உள்ளே செல்லும் சாலைகளை ஒட்டி குறிப்பிட்ட சில மீட்டர்களுக்கு ஒவ்வொரு வருடமும் லண்டனா, பார்த்தீனியம் உள்ளிட்ட தாவரங்கள் அகற்றப்பட்டும், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

இப்பகுதிகளில் மழைக்காலம் துவங்கியதும் பசுமையான புற்கள் வளர்வதால் மான்கள்,யானைகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இந்த புல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் இவற்றை பார்த்து ரசிக்க முடிகிறது.

இதேபோல் நேற்று மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் ஒரு குட்டியுடன் கூடிய இரண்டு யானைகள் சாலையோர புல்வெளியில் மேய்ந்தும், சாலையில் நடமாடியும் திரிந்தன. சாலையில் நின்ற தாயிடம், குட்டி யானை பால் குடித்தது. தாய் யானை குட்டியை பத்திரமாக சாலை ஓரத்திற்கு அழைத்துச்சென்றது. இந்தக் காட்சிகளை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து சென்றனர்.

Advertisement

Related News