தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேத்தி பாலாடா நீரோடையில் கொட்டப்படும் அழுகிய கேரட்களை தின்னும் காட்டுமாடுகள்

Advertisement

*உடல் நலம் பாதிக்கும் அபாயம்

ஊட்டி : ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் நீரோடையில் கொட்டப்படும் சேதமடைந்த கேரட்களை காட்டுமாடுகள் மற்றும் கால்நடைகள் உட்கொண்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் கேரட் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளைய கூடிய கேரட்டிற்கு தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

கேத்தி பாலாடா, கொல்லிமலை சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கேரட்கள் கேத்தி பாலாடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. முதல் ரக கேரட்கள் மட்டும் தரம் பிரித்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.

அழுகியவை மற்றும் அறுவடையின் போது சேதமடைந்த கேரட்கள், தனியாக பிரிக்கப்பட்டு அங்குள்ள நீரோடையில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட கூடிய காட்டுமாடுகள், கேரட் தழைகளை மட்டும் உண்ணாமல் நீரோடையில் கொட்டப்படும் கேரட்களையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றன.

காட்டுமாடுகள் அவற்றை தின்று பழகியதால் தினமும், கேரட் கழிவுகளை தேடி காட்டுமாடுகள் அப்பகுதியில் முகாமிடுகின்றன. இதனால் அவற்றிற்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது. இதுதவிர ஆடு, மாடுகளும் உட்கொண்டு வருகின்றன.

Advertisement

Related News