தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் விபத்து மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், கார் மரத்தில் மோதி வயல்காட்டில் பாய்ந்த விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு 100 அடி ரோட்டை சேர்ந்தவர் ரோகன் (24).

Advertisement

இவர் தனது நண்பர்களான நூரணியை சேர்ந்த ரோகன் சந்தோஷ் (22), யாக்கரையை சேர்ந்த சனுஸ்(19), ரிஷி (24), நெம்மாராவை சேர்ந்த ஜிதின் (21) மற்றும் சந்திரா நகரைச் சேர்ந்த ஆதித்யன் (23) ஆகிய 6 பேருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கல்லிங்கல் பகுதிக்கு காரில் வந்தனர்.

காரை ஆதித்யன் ஓட்டினார். கார் கனால் என்ற இடம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியது. பன்றி மீது மோதாமல் இருக்க ஆதித்யன் காரை திருப்பி போது,கட்டுப்பாட்டை இழந்த கார் சாரையோர மரத்தில் மோதி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய ரோகன், ேராகன் சந்தோஷ், சனுஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஆதித்யன்,ரிஷி, ஜிதின் ஆகியோர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News