தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவில் விஷம் கலந்து அமமுக நிர்வாகியை கொன்ற மனைவி: கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்

Advertisement

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் கீரைப்பட்டியைச் சேர்ந்தவர் ரசூல் (43). டிரைவர். அமமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர். இவரது மனைவி சிக்களூர் கிராமத்தைச் சேர்ந்த அம்முபீ (35). கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு படுத்த ரசூல், நள்ளிரவில் இரண்டு முறை வாந்தி எடுத்துள்ளார். இதனால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, ரத்த மாதிரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரசூல் சாப்பிட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் அதே ஊரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவருடன் அம்முபீ கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், தான் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கலாம் என ரசூல் சந்தேகித்தார்.

இதையடுத்து, அம்முபீயின் செல்போனை சோதனையிட்டதில், லோகேஸ்வரனுடன் பேசிய ஆடியோ இருந்தது. அதில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பாட்டுடன் கலந்து கணவருக்கு கொடுத்ததாகவும், அதில் ஒன்றும் ஆகாததால், மாதுளை ஜூசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்ததாகவும் பேசியது பதிவாகி இருந்தது. இதுகுறித்து, ரசூல் அரூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அம்முபீ மற்றும் லோகேஸ்வரனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். விசாரணையில், லோகேஸ்வரனுடன் 6 ஆண்டுகளாக அம்முபீ தொடர்பில் இருந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரசூல், சலூன் கடைக்குள் புகுந்து லோகேஸ்வரனை சரமாரி தாக்கியுள்ளார். இதையடுத்து தங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் ரசூலை கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு உணவு, ஜூசில் ஸ்லோ பாய்ஷனை கொடுத்தது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரசூல் நேற்று இறந்தார். இதையடுத்து, அம்முபீ, லோகேஸ்வரன் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

Related News