தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியை சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும்: நர்சுக்கு விவாகரத்து வழங்கி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு நர்சுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கணவன் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதால் அவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறி இவர் கோட்டயம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி ஆனது. இதை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisement

அந்த மனுவில் அவர் கூறியிருந்தது: கோட்டயத்தில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த என்னுடைய வேலையை ராஜினாமா செய்ய வைத்து துபாய்க்கு அழைத்துச் சென்றார். துபாயில் என்னை வேலைக்கு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. அவர் வேலைக்கு செல்லும்போது என்னை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வார். வேறு எந்த ஆண்களுடன் பேசக்கூடாது. டிவி பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்.

பலமுறை என்னை அடித்து துன்புறுத்தி உள்ளார். கணவனுடன் தொடர்ந்து வாழ நேரிட்டால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நர்சின் மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மனைவியை தொடர்ந்து சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும் என்று கூறி நர்சுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

Advertisement

Related News