தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவி பிரசவத்திற்கு வந்தவர்கள் இடையே மோதல் கோவை அரசு மருத்துவமனையில் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மனைவி பிரசவத்திற்கு வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், தொடர்புடையை வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கர்ப்பிணி மனைவி ரஞ்சனாவை (28) திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார். அப்போது, டாக்டர்கள் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறும்படி கூறியுள்ளனர்.

Advertisement

இதையடுத்து அவர், கோவை வந்து அரசு மருத்துவமனையில் மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்தார். அதே வார்டில் கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் தனது மனைவி கிருத்திகாவையும் அனுமதித்து இருந்தார். விக்னேஷ், இறைச்சி கடை ஊழியர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய்க்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, விஜய், விக்னேசை தாக்கி உள்ளார்.

இதனால் அவர் விஜய் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே, விக்னேஷ் மனைவிக்கு குழந்தை பிறந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் அரசு மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், விஜய்யிடம் பேச வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோயில் அருகே அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென விக்னேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய் நெஞ்சு, கழுத்து என 11 இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் விஜய் சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் விஜய்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற விக்னேசை அங்கிருந்தவர்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News