தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் சோகம்

Advertisement

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் என்பவரின் மனைவி குஷி என்பவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 முறை தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சல்மான், தனது 4 குழந்தைகளுடன் கைரானா பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் ஒரு காணொளியைப் பதிவு செய்து தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அதில், ‘எனது சாவுக்கு என் மனைவி, அவரது காதலன் மற்றும் மனைவியின் குடும்பத்தினரே காரணம்’ என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, யமுனை ஆற்றில் குதித்து பலியான தந்தை, 4 குழந்தைகளை தேடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று சல்மான் மற்றும் அவரது 12 வயது மகளின் உடல்கள் யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. மற்ற குழந்தைகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சல்மானின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான குஷியையும், அவரது கள்ளக்காதலனையும் தேடி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News