தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!

டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தி்ல இமாலய வெற்றி பெற்ற நிலையில், கடந்த 10ம் தேதி 2வது டெஸ்ட், டெல்லியில் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

Advertisement

அதன் பின், முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், ஃபாலோ ஆனாக, 2வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்தது. 3ம் நாள் ஆட்டத்தின் இறுதியில், வெஸ்ட் இண்டீசின் ஜான் கேம்ப்பெல் 87 ரன், ஷாய் ஹோப் 66 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சாதித்தனர். அதனால், அன்றைய ஆட்டம், 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்னுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், 4ம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடர்ந்தது. சிறிது நேரத்தில் கேம்ப்பெல் 174 பந்துகளில் சதத்தை எட்டினார். ரவீந்திர ஜடேஜா வீசிய 64வது ஓவரில் கேம்ப்பெல் 115 ரன்னில் எல்பிடபிள்யு ஆனார். அவரைத் தொடர்ந்து சதம் விளாசிய ஷாய் ஹோப் (103), 84வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின், டெவின் இம்லாக் 12, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 40, காரி பியரி 0, ஜோமல் வாரிகன் 3, ஆண்டர்சன் பிலிப் 2 ரன்னில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜேய்டன் சீல்ஸ் பொறுப்புடன் ஆடி அட்டகாசமாக ரன்களை சேர்த்து இந்திய வீரர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தனர். இந்த இணை 79 ரன்கள் சேர்த்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் ஜெய்டன் சீல்ஸ் (32 ரன்), வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

அதனால், 118.5 ஓவரில் 390 ரன்னுடன் வெஸ்ட் இண்டீசின் 2ம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட், முகம்மது சிராஜ் 2 விக்கெட்டுகளை பறித்தனர். அதையடுத்து, 121 ரன் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்னில் அவுட்டாக, கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் இணை சேர்ந்து ஆடினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா, ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன் எடுத்திருந்தது. ராகுல் 25, சாய் சுதர்சன் 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று போட்டி தொடங்கியது. 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் சுதர்சன் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 13 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார்.

இந்திய தனது 2வது இன்னிங்சில் 35.2 ஓவரின்போது இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் 58 ரன்களுடனும், ஜுரேல் 6 ரன்களுடனும் காலத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் அணிக்கு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Related News