தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்ஐஆரால் பணி அழுத்தம் பூத் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்: தடுப்புகளை மீறி போலீசுடன் மோதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ள பூத் நிலை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியால் அதிக பணிச்சுமை ஏற்பட்டு மன அழுத்தம் காரணமாக பூத் நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், பெரும்பாலான பிஎல்ஓக்கள் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிஎல்ஓ அதிகார ரக் ஷா கமிட்டி வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் நேற்று எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎல்ஓக்கள் ஆர்ப்பாட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

Advertisement

இதில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள், 2 ஆண்டுக்கு மேலாகும் பணியை ஒரே மாதத்தில் முடிக்க அழுத்தம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் வடக்கு கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் உள்ள மாநில தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரியிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. சிலர் தடுப்புகளை மீறி நுழைய முயன்றதால் இருதரப்பில் மோதல் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News