தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்ஐஆர் பணிச் சுமையால் பிஎல்ஓ தூக்கிட்டு தற்கொலை: தேர்தல் ஆணையம் மீது மம்தா தாக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச் சுமையால் மன அழுத்தமடைந்த வாக்காளர் நிலை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ரங்கமதி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூத்தின் பிஎல்ஓ 48 வயதான சாந்திமுனி ஓராவ் தனது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்கன்வாடி பணியாளரான அவர் எஸ்ஐஆர் பணி தொடங்கியதில் இருந்து கடுமையான பணிச்சுமையால் அவதிப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். இந்த மன உளைச்சல் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ‘‘மற்றொரு பிஎல்ஓ மரணத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். எஸ்ஐஆர் செயல்முறை தொடங்கியதில் இருந்து 28 பேர் இறந்துள்ளனர். இதற்கு முன் 3 ஆண்டுகள் நடந்த இப்பணியை அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க தேர்தல் ஆணையம் 2 மாதத்திற்குள் முடிக்க கட்டாயப்படுத்துகிறது. இதனால் பிஎல்ஓ போன்ற களப்பணியாளர்களுக்கு மனிதாபிமானமற்ற அழுத்தம் தரப்படுகிறது. இடைவிடாத பணிச்சுமையால் அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. உயிர்களை காக்க உடனடியாக எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News