தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குவங்கத்தில் 32,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்த ஒற்றை பெஞ்ச் உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நேற்று ரத்து செய்தது. மேற்கு வங்க தொடக்கப்பள்ளி வாரியத்தால் 2014 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு 2016ஆம் ஆண்டு 32 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ெகால்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா, மேற்குவங்க அரசின் 32 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement

இதை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூடுதல் மதிப்பெண் பெற்ற 264 ஆசிரியர்கள் மற்றும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட 96 ஆசிரியர்களை தவிர மற்ற அனைவரையும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. இருப்பினும் கொல்கத்தா தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தபபிரதா சக்ரவர்த்தி மற்றும் ரீதபிரதா குமார் மித்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, 32 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை டிஸ்மிஸ் செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அனைத்து பணியமர்த்தல்களிலும் முறைகேடுகள் நிரூபிக்கப்படாததால் தனி நீதிபதி உத்தரவை ஏற்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணிநீக்கம் செய்வது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

Advertisement