தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குவங்க மாநிலத்தில் 14 லட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்

Advertisement

கொல்கத்தா: தலைமை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்களைப் புதிய வாக்காளர்களாகச் சேர்ப்பது, ஏற்கனவே உள்ள பிழைகளைத் திருத்துவது மற்றும் தகுதியற்ற பெயர்களை நீக்குவது போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, அவர்களிடமிருந்து உரியப் படிவங்களைப் விநியோகித்தும், அதனைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கையின் போது, சுமார் 14 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் ‘ஏற்றுக் கொள்ள முடியாதவை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் கள ஆய்விற்குச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அந்த முகவரியிலிருந்து நிரந்தரமாக இடம் மாறியது, மரணமடைந்தது, ஒரே பெயர் பல இடங்களில் இடம்பெற்றது அல்லது நீண்ட நாட்களாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வெளியூர் சென்றது போன்ற காரணங்களால் இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாக, தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்கித் தரவுகளைச் சுத்திகரிக்கும் பணியே இதுவாகும்.

Advertisement

Related News