தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்

கொல்கத்தா : மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், இது பற்றி காவல்துறையினர் முழுமையான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் சி வி ஆனந்த் போஸ், தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் புகார் கொடுத்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இருக்கும் பதவியை விட மேலான பதவியை கொடுப்பதாக கூறி ஆளுநர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் புகார் அளித்தார். இது முற்றிலும் பொய்யான புகார் என்றும் ஆனந்த் போஸ் ஏற்கனவே மறுத்து இருந்தார்.
Advertisement

இந்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 361-வது பிரிவின் கீழ் ஆளுநர் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுபடுவதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தலும் ஆளுநரின் கடமைக்குள் தான் வருகிறதா என்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரிவு 361-ன் கீழ் தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிலிருந்து ஆளுநர் தன்னை விடுவித்துக் கொள்ள அதிகாரம் உள்ளதா என்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 361வது சட்டப்பிரிவு போலீசாரின் அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் எனவே மேற்கு வங்க போலீசார் தம்முடைய புகார் பற்றி முழுமையாக விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் பெண் ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து விலகும் வரை பாதிக்கப்பட்டவர் காத்திருக்க வேண்டும் என்பது அநீதியானது என்றும் மனுவில் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News