தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 20 பேர் பலி, ஏராளமானோர் காயம்

டார்ஜிலிங்: மேற்குவங்கத்தின் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.  மேற்குவங்க மாநிலத்தில் வடக்கில் இமயமலை பகுதிக்குள்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டார்ஜிலிங்கில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. கனமழை காரணமாக டார்ஜிலிங் சதர், மிரிக், சுகியா போகாரி, ஜோர்பங்லோ, புல்பஜார் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Advertisement

இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது. மேற்குவங்கத்தையும், சிக்கிமையும் இணைக்கும் சாலைகள் மற்றும் டார்ஜிலிங் சிலிகுரியை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த பகுதிகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் நிலச்சரிவுகளில் சிக்கி உள்ளனர்.

உள்ளூர் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கனமழை, நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி விட்டனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சபபடுகிறது. மேலும் சிலர் மாயமாகி உள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியும், மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. நவராத்திரி விடுமுறையை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் சென்றுள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் வௌியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில், ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது.

* ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன் எக்ஸ் பதிவில், “டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். மீட்பு பணிகள் வெற்றிகரமாக நடக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “டார்ஜிலிங்கில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement