தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் நிதியில் கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியமா?: தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம்

சென்னை: கோயில் நிதியில் கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியம் செயல்படுவதாக பரவும் வதந்திக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் இந்து கோயில்களின் நிதியில் செயல்படுவதாகவும், இந்துக்களின் வரிப்பணம் இதற்காக செலவிடுவதாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
Advertisement

இதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு கூறியிருப்பதாவது: இது முற்றிலும் பொய்யான தகவல். இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் கோயில்களின் நிதியை வேறு துறைக்கு செலவிட முடியாது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வழக்கமாக உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் என்பது சிறுபான்மை நலத்துறையின் கீழ் வருவதால், அந்த துறைக்காக ஒதுக்கப்படும் நிதியின் மூலமாகவே நலவாரியம் இயங்கி வருகிறது. இதேபோல், கிராம கோயில் பூசாரி நலவாரியம், இஸ்லாமியர்களுக்கான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் போன்றவை அந்தந்த பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட வருகின்றன. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள். பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement