தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடுகுப்பம் கிராமத்தில் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருத்தணி: ஆற்காடுகுப்பம் கிராமத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் கிராமத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ராமாபுரம், ஆற்காடுகுப்பம், நாபளூர், மாமண்டூர், அருங்குளம் உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இதில் 15 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களின் மனுக்களை பெற்று, ஆன்லைனில் பதிவு செய்தனர்.
Advertisement

இம்முகாமில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். பின்னர், அம்மனுக்கள்மீது ஆய்வு நடத்தி, விரைவில் உரிய தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தினார். மேலும், தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் வட்டாட்சியர் மலர்விழி, திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், நிர்வாகிகள் கமலநாதன், யுவராஜ், திலக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News