தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு உயிர்களை காப்பாற்ற படியுங்கள்

*மருத்துவக்கல்லூரி டீன் பேச்சு

Advertisement

மதுரை : தேர்ச்சிக்காக இல்லாமல், உயிர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் மாணவர்கள் படிக்க வேண்டும் என, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் டீன் அருள் சுந்தரேஸ்குமார் பேசினார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘தளிர்-25’ என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நேற்று நடந்தது. கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் மல்லிகா முன்னிலை வகித்தார். ஆர்எம்ஓ டாக்டர் சரவணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் அருள்சுந்தரேஸ்குமார் பேசியதாவது:

படிப்புடன், விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மருத்துவம் என்பது மிக மகத்துவமான தொழில். எப்போதும் மருத்துவம் குறித்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இடைவிடாத பணி அழுத்தத்தை குறைக்க நல்ல பழக்கங்களை கையாளுங்கள். ராகிங்கில் ஈடுபட மாட்டோமென்ற மூத்த மாணவர்களின் உறுதிமொழியால் முதலாமாண்டு மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். எனினும், நம்மை யாராவது துன்புறுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ உணர்ந்தால்எங்களது கவனத்திற்கு கொண்டுவாருங்கள். புகார் அளிப்பவர்கள் பெயர் ரகசியம் காக்க்கப்பட்டு, பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். ராகிங் செய்பவர்களை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்வதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது. இதை அனைவரும் உணர வேண்டும்.

3 கல்வியில் வெற்றி, தோல்வி சகஜம். தோல்வி தான் நம்மை வழிநடத்தும். விருப்பத்தோடு படியுங்கள். இந்த கல்லூரியில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக மட்டும் மருத்துவத்தை படிக்காதீர்கள். புரிந்து, உணர்ந்து, உயிர்களை காப்பாற்றும் நோக்கில் படியுங்கள். அப்படி நடந்தால் நம்மை இத்துறையுடன் முழுமையாக இணைத்துக்கொள்ள முடியும். இதன் வாயிலாக நம்மை பார்க்கும் நோயாளிக்கு, இவர் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முதலாமாண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் மலர், இனிப்பு கொடுத்து வரவேற்றனர். உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களே நடித்த ‘மறுபிறவி’ என்ற தலைப்பில் குறும்படம் ஒளிப்பானது.

Advertisement