தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பளுதூக்கும் போட்டியில் 350 கிலோ எடையை தூக்கி 7 மாத கர்ப்பிணி போலீஸ் அசத்தல்

அமராவதி: கர்ப்பம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 7 மாத கர்ப்பிணி காவலர் அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லி காவல்துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சோனிகா யாதவ் (31). இவர் கடந்த 2023ம் ஆண்டு முதல் பளுதூக்கும் வீராங்கனையாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அமராவதியில் அகில இந்திய காவல்துறைக்கான பளுதூக்கும் போட்டி கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில் டெல்லி காவல்துறை சார்பில் சோனிகா யாதவும் கலந்துகொண்டார். 84 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், மொத்தம் 350 கிலோ எடையை தூக்கி அனைவரையும் பிரமிக்க வைத்தார். குறிப்பாக, 145 கிலோ டெட்லிஃப்ட், 125 கிலோ ஸ்குவாட் மற்றும் 80 கிலோ பெஞ்ச் பிரஸ் என எடைகளை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றி குறித்து சோனிகா யாதவ் கூறும்போது, ‘கர்ப்பம் என்பது பெண்ணின் இலக்குகளை அடைவதற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை நிரூபிக்கவே இதில் பங்கேற்றேன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மகப்பேறு மருத்துவரின் முறையான ஆலோசனையுடனும், நிபுணர்களின் மேற்பார்வையுடனும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாக அவர் கூறினார். சோனிகாவின் இந்தச் சாதனையை டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Related News