தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்காமல் இருப்பது எந்த வகையில் ஜனநாயகம்..? ஐகோர்ட் கேள்வி

Advertisement

சென்னை: தமிழகத்தில் உள்ள காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர் வரை சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனை காவல்துறை உயர்திகாரிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அரசாணை முறையாக பின்பற்றப்படவில்லை, காவலர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை பின்பற்றப்படவில்லை என மதுரை வாசிம்பட்டியை சேர்ந்த காவலர் ஹரீஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எசிஓக்கள், ஆகிய எல்லாருக்கும் சங்கங்கள் உள்ளது. ஆனால் காவலர்களுக்கு மட்டும் சங்கம் இல்லை. இது எந்த வகையில் ஜனநாயகம்?, மனித உரிமை மீறல் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

madras police act அடிப்படையில்தான் அண்டை மாநிலங்களிலும் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்த சூழலில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, வார விடுமுறை வழங்குவதில் என்ன சிக்கல் என கேள்வியெழுப்பியனர்.

இந்த அரசாணை பின்பற்றப்படுவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Advertisement