தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமண விழாவில் மணமக்களுக்கு வாழ்த்து பிறக்கப்போகும் குழந்தைக்கு தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியின் இல்ல திருமண விழா சேந்தமங்கலம் பகுதியில் நடந்தது. அப்போது, பிறக்கப்போகும் குழந்தைக்கு மணமக்கள் தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியின் இல்ல திருமண விழா நேற்று காலை நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில்; தம்பதியினருக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மேலும், கலைஞரும் தமிழும் போல, தலைவரும் உழைப்பும் போல, இயக்கமும் இயக்க தொண்டர்களை போல ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார். நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News