தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்

*ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ளே விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

இங்கு வருடம் தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காலை மற்றும் இரவில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து கடந்த 27ம் தேதி தேரோட்டமும், 28ம் தேதி இரவு ஸ்படிக பல்லாக்கு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் நடந்தது.

இதை முன்னிட்டு உற்சவமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருள, கெட்டி மேளங்கள் முழங்க ஆடிப்பூர திருக்கல்யாணம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை தூவி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Related News