தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிஞ்சிருக்கான் Weaver ant

சிஞ்சிருக்கான் (Weaver ant) என்பது ஒரு வகை எறும்பு ஆகும். இதை தையற்கார எறும்பு என்று சொல்வார்கள். இந்த தையற்கார எறும்புகள் மரங்களில் வாழ்கின்றன. அவற்றில் வேலைக்கார எறும்புகள் தாங்கள் வசிக்கும் மரத்தின் இலைகளை வளைத்து அவற்றைப் பட்டுப்போன்ற இழை மூலம் இணைத்து கூட்டை வடிவமைப்பவை. இவற்றை ஒன்றிணைப்பதற்கு எறும்பின் தோற்றுவளரிகள் வெளியிடும் (Larvae) இழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும். இவற்றில் முதன்மையான வேலைக்கார எறும்புகள் சுமார் 8-10 மிமீ நீளமும், சிறிய எறும்புகள் அவற்றின் அளவில் சுமார் பாதியளவு நீளமும் கொண்டவை.

Advertisement

இந்த எறும்புகள் சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறங்கள் என இனங்களைப் பொறுத்து நிறத்தில் வேறுபடுகின்றன. இந்த வகையின் ராணி எறும்புகள் பச்சை நிறத்திலும் இறக்கைகளுடனும் இருக்கும். இவை கூட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும். எதிரிகள் வந்தால் விரைந்து கடித்துவிடும். கடிக்கும்போது கடிவாயில் பாமிக் அமிலத்தை செலுத்தும் என்பதால், கடிபட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படும். இது ஓர் இரைக்கொல்லியும்கூட. இவை மரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடுவதால் இவை நன்மை செய்யும் பூச்சிகளாக கருதப்படுகின்றன.

Advertisement