தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோசமான வானிலை காரணமாக 2 முறை அந்தமான் சென்று தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்: பயணிகள் கடும் அவதி

Advertisement

சென்னை: சென்னையில் இருந்து 168 பயணிகளுடன், அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், அங்கு மோசமான வானிலை நிலவுவதால், அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பியது. நேற்று பிற்பகல், சென்னையில் இருந்து மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், இரண்டாவது முறையாகவும், அங்கு தரை இறங்க முடியாமல் நேற்றிரவு சென்னைக்கு திரும்பியது.

இதேபோல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு 154 பயணிகளுடன், புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் தரை இறங்க முடியாமல், கொல்கத்தா விமான நிலையம் சென்று தரை இறங்கி உள்ளது. இதை அடுத்து அந்தமான் சுற்றுலா பயணிகள் 168 பேர், சென்னை விமான நிலையத்திலும், 154 பேர் கொல்கத்தா விமான நிலையத்திலும் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் கூறுகையில், ‘‘பயணிகள் அனைவரும் விமான கட்டணத்தை திருப்பி பெற்றுக் கொண்டு, உங்கள் பயணத்தை ரத்து செய்து விடுங்கள்’’ என்றனர். ஆனால் பயணிகள் தரப்பில், ‘‘நாளை (இன்று) எங்களை விமானத்தில் அந்தமானுக்கு அழைத்து செல்லுங்கள். நீங்கள் பயண கட்டணம் திருப்பித் தர வேண்டாம்’’ என்று கூறினர். ஆனால் விமான நிறுவனம் இதை ஏற்கவில்லை. இதனால் பயணிகள் மற்றும் விமான நிறுவனம அதிகாரிகள் இடையே வாக்குவாதம் நடந்தது.

Advertisement