தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து..!!

டெல்லி: மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 157 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டு 216 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 130க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 500 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 400 குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பயணம் செல்வதாக இருந்தது. ஆனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நிலவும் என்பதால் பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் இன்று வயநாடு பயணம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து,
Advertisement

ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறுகையில்,

வயநாடு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. தற்போது நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் வயநாடு வருகை தருவதாக ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் வயநாடு மக்களுடன் உள்ளன. வயநாடு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

Advertisement

Related News