தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் 200 ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல்

Advertisement

இம்பால்: மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா இனத்தவரிடையே ஏற்பட்ட மோதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வௌியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு என்.பிரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி ரத்து செய்யப்பட்டு, தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் பல இடங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மணிப்பூரில் உள்ள மலை மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மணிப்பூர் கூடுதல் காவல்துறை தலைவர் லாஹாரி டோர்ஜி லஹாடூ கூறுகையில், “மணிப்பூரின் மலை மாவட்டங்களான தெங்னவுபால், காங்போக்பி, சண்டேல் மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மலை மாவட்டங்களின் பல இடங்களில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறையின் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் 4 மலை மாவட்டங்களில் காவல்துறை, அசாம் ரைபிள்ஸ் பிரிவினர், ராணுவம், மத்திய ஆயுதப்படை ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை அதிரடி சோதனைகளை நடத்தினர். அப்போது இந்த மலை மாவட்டங்களின் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும், 30 கண்ணி வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

Advertisement