தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அரசு பிடிவாதம் : மனிதாபிமானமற்ற செயல் என கேரள அரசு கண்டனம்!!

Advertisement

திருவனந்தபுரம் : ஒன்றிய அரசின் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று கேரள அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயம், அதீத கன மழையுடன், திடீரென்று பெருத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பான்மையான மக்கள் மண்ணில் புதையுண்டர். அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி மண்ணில் புதையுண்ட சிலரை காப்பாற்றி இருந்தாலும், இதில் 251 பேர் உயிரிழந்தனர் 47 பேரைக் காணவில்லை. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அத்துடன் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. ஆனால் எந்த தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் உள்ள ரூ.390 கோடியை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ராஜு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ளார்.

வயநாடு விபத்தை அதி தீவிர விபத்து என்று எல்3 பிரிவில் கூட சேர்க்க மறுப்பதாகவும் கேரள மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு சவால் விடுவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வயநாட்டிற்கு பிறகு மழை, புயல், பாதிப்பு ஏற்பட்ட ஆந்திராவுக்கும் பீகாருக்கும் சிறப்பு நிதி வழங்கிய ஒன்றிய அரசு, கேரளாவிற்கு ஏன் நிதி வழங்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த புறக்கணிப்பிற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.

Advertisement

Related News