தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயநாடு நிலச்சரிவு; உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறுகையில், கேரளா- வயநாடு பகுதியில் நடந்துள்ள நிலச்சரிவில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
Advertisement

இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவரதம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் 2 இலட்ச ரூபாய் இழப்பீடு மிகவும் குறைவானதாகும். எனவே, அதனை ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். நிலச்சரிவு ஆபத்து உள்ள மாநிலங்களாக வடகிழக்கு மாநிலங்களையே ஒன்றிய அரசு அடையாளப்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளது.

கேரளாவையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்த தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் என்பதால் இதனை அலட்சியம் செய்யாமல் மீட்புப் பணிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News