வயநாடு நிலச்சரிவு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்
Advertisement
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலையில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனஇந்த நிலச்சரிவில் சிக்கி 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மீட்க்கப்பட்டுள்ளதாக ராணுவதம் தெரிவித்துள்ளது. மீட்க்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பிறகு அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement