தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தினமும் இந்தக் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சங்கிலிப்பாறை, மாங்கனி ஓடை, கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்டவைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சதுரகிரி கோயிலுக்கு மலையேறி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை தாணிப்பாறை கேட் அருகே காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement

Related News