தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தனூர் அணையில் 15,000 கனஅடி நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 9,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113.60அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பப்பட்டுள்ளது. சாத்தூர் அணையில் இருந்து நீர்திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொலமஞ்சனூர், திருவாதனூர், புதூர்செக்கடி, எடத்தனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement