தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!!

Advertisement

சென்னை : பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படுகிறது. இதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள் என்றும் இந்த குழுவினர் இயற்கை பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ள பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று அந்த பகுதியில் நீர்வளத்துறை அதிகாரியுடன் மீட்புப் பணிகளில் மேற்கொள்வார்கள் என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி விரைவில், இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் குழுவினர் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன கட்டமைப்பு மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பாதிக்காத வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பணிகளுக்காக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் வெள்ள பாதிப்பு இடத்திற்கு செல்லும் நாட்கள் பணியில் உள்ள நாட்களாகவே கருதப்படும் என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News