தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெசவு தொழிலாளி கொலையா ?

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை மேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (56). பட்டுத்தறி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெகநாதன் கடந்த 2 மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
Advertisement

இதில் கடந்த மாதம்தான் இவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்று வருவதாக கூறிய ஜெகநாதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரவு முழுவதும் ஜெகநாதனை தேடி கிடைக்காத நிலையில், நேற்று வேதவதி ஆற்றங்கரை பகுதியில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார்.

இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகநாதன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரை கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement