தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; ஏமன் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பத்திரிகையாளர்கள் உள்பட 46 பேர் பலி

சனா: ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 46 பேர் உயிரிழந்த சம்பவம்,ஹவுதி கிளர்ச்சியாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் காசா போர் தொடங்கியதில் இருந்து, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹவுதிகளால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏமன் தலைநகர் சனா மற்றும் வடக்கு மாகாணமான அல்-ஜாஃப் பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹவுதிகளின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் கூறினாலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்பட்டதாக ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில், தலைநகர் சனாவில் உள்ள ஊடக அலுவலகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர்; 147 பேர் காயமடைந்தனர்.

இதேபோல், அல்-ஜாஃப் மாகாணத்தில் அரசு வளாகம் மற்றும் மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர், இதற்குப் பழிவாங்கப்படும் என சபதம் விடுத்துள்ளார். ஏற்கனவே கத்தாரில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Advertisement