தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வக்பு வாரியம் சார்பில் பட்டப்படிப்பு பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் பொருளாதார தடையினால் உயர்கல்வியினை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.

Advertisement

இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000/- மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 முதல் 8 –ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு ஒரு மாணவிக்கு ரூ.1,000/- வீதம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

மசூதிகள், தர்காக்கள் மற்றும் இதர வக்பு நிறுவனங்களில் பெரிய அளவிலான பழுதுபார்ப்பதற்கும் மற்றும் புனரமைப்பதற்கும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டு (2025-26) தொன்மையான 10 வக்பு நிறுவனங்களை பழுதுபார்த்து சீரமைக்க ரூ.10 கோடி மற்றும் பெரு மராமத்து மற்றும் பழுதுபார்ப்பு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மசூதிகள் மற்றும் தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3 கோடியில் தொகுப்பு நிதியும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதார தடையினால் உயர்கல்வியினை தொடர இயலாத இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை தொடர ஏதுவாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் 2000 மாணவ மாணவியருக்கு தலா ரூ.10,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்கமாக 10 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் எ.சரவணவேல்ராஜ்.இ.ஆ.ப., சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News