தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலாஜா அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைக்காமல் ₹27.27 லட்சம் நிதியை விடுவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்கு: விஜிலென்ஸ் போலீசார் விசாரணை

Advertisement

வேலூர்: வாலாஜா அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைக்காமல் ₹27.27 லட்சம் நிதியை விடுவித்த முன்னாள் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் கடந்த 2017-2018ம் ஆண்டு லேப், ஐசியூ, டயாசிலிஸ், லிப்ட் வசதியுடன் கூடிய புதிய வெளிநோயாளிகள் பிளாக் கட்டுவதற்காக ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டுமானப்பணிகளை ஒப்பந்ததாரர் வாலாஜாவை சேர்ந்த செந்தில்குமார் மேற்கொண்டார்.

மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து. ஆனால் லிப்ட் அமைக்கவில்லை. அப்போது பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியளர்கள் முரளிதரன், செந்தில்குமார், அப்போதைய உதவி ெசயற்பொறியாளர் தேவன், இளநிலை பொறியாளர் ராஜாமணி ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம்தேதி லிப்ட் வாங்குவதற்கு ₹20 லட்சத்து 45 ஆயிரத்து 625 நிதியை விடுவித்துள்ளனர். இதையடுத்து, லிப்ட் அமைக்கும் இறுதிகட்ட பணிக்காக 2ம் கட்டமாக ₹6 லட்சத்து 81 ஆயிரத்து 875 நிதி ஒப்பந்ததாரருக்கு விடுவித்துள்ளனர். மொத்தம் ₹27 லட்சத்து 27 ஆயிரத்து 500 நிதி விடுவித்தும் லிப்ட் அமைக்கவில்லை.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டு லிப்ட் அமைப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். பின்னர், மே, ஜூன் மாதத்தில் லிப்ட் அமைப்பதற்கான பொருட்கள் வந்த பிறகு டிசம்பர் 2022ம் ஆண்டு நிறைவுபெற்றது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம்தேதி லிப்ட் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். லிப்ட் அமைக்காமல் நிதி விடுவிக்கப்பட்டதாக வேலூர் விஜிலென்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி சங்கர், விசாரணை தொடங்கினார்.

விசாரணையில், லிப்ட் அமைக்காமல் 2 கட்டமாக ₹27 லட்சத்து 27 ஆயிரத்து 500ஐ முறைகேடாக நிதி விடுவித்து தெரியவந்தது. இதையடுத்து டிஎஸ்பி சங்கர் புகாரில் பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியளர்கள் முரளிதரன், செந்தில்குமார், தற்போது பொதுப்பணித்துறையில் அதிகாரிகளாக உள்ள தேவன், ராஜாமணி மற்றும் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் செயற்பொறியாளர் செந்தில்குமாரின் பணி ஓய்வை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement