தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுவர் ஏற முயன்ற ஒருவர் பிடிபட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தின் அருகே சந்தேக நபர் கைது

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி முடிவடைந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் உயர் பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏறி குதிக்க முயன்றார். அந்த நபர் குஜராத்தை சேர்ந்தவர். அவரிடம் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் ரயில் பவனுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ரைசினா சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 20 வயது நபரை மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் கைது செய்து கடமைபாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

முதற்கட்ட விசாரணையில் கைதான நபர் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்து துபாய்க்கு செல்ல இருந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. அவரிடமிருந்து எந்த பொருளும் மீட்கப்படவில்லை. அவரது செல்போனில் இருந்து ஆதார் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சிஐஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மர்ம நபர் சுவர் ஏறி குதிக்க முயன்றதை தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் இருப்பதால், சந்தேகத்திற்கு இடமானவர்கள் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்’’ என்றார்.

Advertisement